தமிழ் அரசியல் கைதிகள் பௌத்த பீடாதிபதிகளுக்கு உருக்கமாக கடிதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-29 11:20:18] எங்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எங்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அல்லது பிணை கிடைக்க வழி செய்யுங்கள்.
இப்படி உருக்கமாகக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் பௌத்த பீடாதிபதிகளுக்கு கடிதங்களை அனுப்பி உள்ளார்கள்.
மல்வத்தை பீடாதிபதி,அஸ்கிரிய பீடாதிபதி, சியம்ப பீடாதிபதி ஆகியோருக்கு நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் சார்பாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளால் இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
|