கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேதினத்தில் கலந்துகொண்ட விடயம் சம்பந்தமாகவும் இலங்கை தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த விடயம் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவிடம் திட்டமிட்டு இலங்கை தேசியக் கொடியை பிடிக்கச் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயல் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நரித் தந்திரமாகும். ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தி அந்த அமைப்பை அழிப்பதற்கு உதவிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இப்போது தமிழர்களின் அரசியல் சக்தியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்குடனேயே இரா.சம்பந்தன் ஐயாவின் கையில் பலாத்காரமாக சிங்கக்கொடியை கொடுத்து உயர்த்திப்பிடிக்கச் சொய்துள்ளார் என்னைப் பொறுத்தமட்டில் மேற்படி சம்பவம் இலங்கையில் உள்ள எந்த பேரினவாதக் கட்சிகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டணிவைக்கக் கூடாது என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது.்
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த இலங்கையின் அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் "83 யூலை கலவரத்தின் மூலம் தமிழர்களை கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு கொஞ்சிக் குலாவுவதாக" கூறியிருந்தார். என்னை பொறுத்தவரை இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடமேறிய இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களை கொலை செய்த கட்சிகள் தான்.
அது 83 யூலை கலவரத்தில் தமிழர்களை கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சியாகவிருந்தாலும் சரி 2009ம் ஆண்டு இராணுவ படைநடவடிக்கை மூலம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியாகவிருந்தாலும் எல்லா சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளும் தமிழர்களை கொலை செய்து அதனூடாக சிங்கள மக்களிடம் ஆதரவு திரட்டியவர்கள் தான்.
இவர்களுடனான கூட்டணி ஒருபோதும் தமிழர்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதே வரலாறு. எனவே கூட்டமைப்பு பெரும்பான்மைக் கட்சிகளுடனான கூட்டணிகளை புறக்கணித்து தமிழர்களுக்கான தனித்துவம் நிறைந்த கட்சியாக கூட்டமைப்பை செயற்படுத்தவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.